Please specify the group
5:14 pm - Saturday April 29, 2028

Buy Domain!... Get Website Free!... Contact madurai360.in@gmail.com

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை வரலாறு – பகுதி 2

madurai thirumalai nayakar mahal photos

madurai thirumalai nayakar mahal photos

வரலாறு:

அரண்மனை முற்றம்:

இந்த பிரம்மாண்டமான அரண்மனைக்குள் நுழைந்ததும் நாம் காண்பது முற்றப் பகுதியாகும். உள்ளே நுழைந்ததும் ஒரு பெரும் முற்றவெளியும் சுற்றியும் வானுயர நிற்கும் தூண்கள் தாங்கிய கட்டிடமும் உள்ளன. மேற்கில் பல வேலைப்பாடுகளுடன் அமைந்த ஒரு கட்டிடப் பகுதி உள்ளது. முற்றத்தின் வடக்கிலும், தெற்கிலும், நடுவில் சாலை வடிவமான மிக உயர்ந்த கட்டிடப் பகுதிகள் இருக்கின்றன. இவற்றின் ஸ்தூபிகள் முன்பு பொன்னால் செய்யப்பட்டிருந்தன.

சொர்க்க விலாசம்:

இரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகளின் வழியே, மேற்கில் எழில் வாய்ந்தபகுதியை அடையலாம். இதுவே சொர்க்க விலாசம் என்பது. மிகவும் நெடிய தூண்களும், எழிலார்ந்த வேலைப்பாடுகளும், குவிந்து மேலே தோன்றும் விமானங்களும் (விமானம் – அரண்மனையின் மேல் தளத்தில் உள்ள அழகிய சிலைகளும்,ஓவியங்களும் நிறைந்த பகுதி) கலைத்திறனின் எடுத்துக்காட்டுக்கள். பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டுபவை. இப்பகுதியின் நடுவில் மிகவும் விசாலமான இடமும் அதன் மேல் குவிந்து உயர உயரச் செல்லும் விமானமும், நாம் சொர்க்கத்தில் நிற்கிறோமே என்னும் வியப்பைத் தோற்றுவிக்கின்றன. ஆதலால் தான் இதைச் சொர்க்க விலாசம் என்று மன்னன் அழைத்து மகிழ்ந்திருந்தான். இதன் மேலிருந்த ஸ்தூபிகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. இவ்விடத்தின் கல் பீடத்தின் மேல் யானைத் தந்தத்தினால் ஆன நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த ஒரு சாலை (மண்டபம்) வைக்கப்பட்டிருந்தது. இதன் நடுவில் ரத்தினங்களால் செய்யப்பட அரியணை இருந்தது. அதன் மீது அமர்ந்து தான் திருமலை மன்னன் செங்கோல் ஆட்சி புரிந்தான்.

அந்தப்புரம்:

சொர்க்க விலாசத்தின் மேற்கில் அந்தப்புரம் இருந்தது. தென் மேற்கில் கருங்கல் தூண்கள் கொண்ட ஒரு இடம் இருக்கிறது. இங்கு இரண்டு அறைகள் இருந்தன. இப்பொழுது உள்ளது ஒன்றின் பகுதியே. இங்கு அரச தேவியும், பிற பெண்களும் இசையும், இலக்கியமும் கேட்டு மகிழ்வர். இதன் தென்மேற்கில் மூலையில் அரண்மனையின் மேலே செல்லப் படிகள் இருக்கின்றன. அங்கே பல பகுதிகளில் சுற்றி வர வசதியாக இருக்கிறது. திருமலை மன்னர் தன் மனைவியருடன் மேலே சென்று சுற்றி வரும் போது, கீழிருந்து மக்கள் இவர்களைக் கண்டு வணங்குவது வழக்கம்.

Filed in: A Madurai 360, Madurai History, Thirumalai Nayak Palace, Touriest Places

No comments yet.

Leave a Reply

You must be logged in to post a comment.